பிரபல தமிழ் திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் திடீர் உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுநீரகக்கல் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகானுக்கு
அறுவை சிகிச்சை செய்யப்படள்ளது. அதற்கு முன் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கோவை - தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு மன்சூர் அலிகான் கட்டுப்பணத்தை இழந்தார்.
நடிகர் விவேக் இறந்ததை அடுத்து அவரது மரணத்திற்கு கொரோனா தடுப்பூசிதான் காரணம் என சர்ச்சைக்குரிய கருத்தை மன்சூர் அலிகான் வெளியிட்டார்.
இதையடுத்து கொரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவலை பரப்பியதற்காக அவர் மீதுஐந்து பிரிவுகளில் பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கில் அவருக்கு 2 இலட்சம் ரூபா அபராதம் விதித்த உயர்நீதிமன்றம், தடுப்பூசி குறித்து தவறான தகவலை பரப்பக்கூடாது என்ற நிபந்தனையுடன் அவரை விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.